• முகப்பு
  • political
  • எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுகவினர் தீர்மானம்.

எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுகவினர் தீர்மானம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கத்தில் நடைபெற்ற இதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி தலைமை வகித்தார். அமைப்புச் செயலர்கள் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, முக்கூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாவட்டச் செயலர் தூசி மோகன் வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.

VIDEOS

RELATED NEWS

Recommended