• முகப்பு
  • aanmegam
  • சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருக்குவளை தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவீதியுலா.

சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருக்குவளை தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவீதியுலா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 5:56:21 AM

நாகை மாவட்டம் திருக்குவலையில் தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம், நவ கிரகங்களின் தோஷம் நீக்கும் ஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலய கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் சிறப்பு திருவீதி உலா காட்சி நடைபெற்றது.இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் மற்றும் விநாயகர்,சண்டிஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள். தொடர்ந்து திருக்குவளை சகோதரிஞகள் முனைவர் ‌மு.சுந்தரி, மு.சாவித்திரி ஆகியோரின் மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தவதருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று‌ மற்ற னமுறுதி சாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended