தேமுதிக கொடிநாள் முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய மகளிர் அணி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 13, 2023, 6:46:43 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருதங்குடி கிராமத்தில் தேமுதிக கொடி நாள் முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி தலைவியின் தலைமையில் கொடி ஏற்றி கேக் வெட்டி கொண்டப்பட்டது.
தேமுதிக தலைவர் கேப்டன் , கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் எல் .வெங்கடேசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ் எஸ் கருணாகரன், வழிகாட்டுதல்படி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இரா .காமராஜ் ஆலோசனைப்படி தேமுதிக கொடி நாள் விழாவை முன்னிட்டு, திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் அருதங்குடி கிராமத்தில் மாவட்ட மகளிர் அணி தவமணி வெங்கடேசன், கழக கொடிஏற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வில் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் கிளை கழக செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய நிர்வாகி பிரபு மீசை வெங்கடேசன் சுரேஷ் அஜித் குமார் ரவி சதீஷ் முத்துக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஜெயபாலன்.