கிராம மக்கள் கோரிக்கை
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
விளம்பூர் கிராமத் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் , விளம்பூர் , பனையூர் , கடம்பாக்கம் , செய்யூர் வட்டம் , செங்கற்பட்டு மாவட்டம் பொது மக்கள் தங்களது கோரிக்கையை தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நிறைவேறாத நேடு நாளைய கோரிக்கையை வைத்து உள்ளனர்.
போக்கு வரத்து வசதி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் நலன் கருதி மதுராந்தகத்திலிருந்து எல்லையம்மன் கோயில் வரை வந்து நிற்கும் தட எண் . T - 7 நகர் பேருந்தை பனையூரிலிருந்து - கடப்பாக்கம் - ஆலமர சாவடி வரை காசிபாட்டை வழியாக நீட்டித்து இயக்க ஆணை பிறப்பித்தல் - சம்பந்தமாக கோரிக்கை வைத்துள்ளனர்
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவு மாணவிகள் , கடப்பாக்கத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர் . இவர்கள் தற்போதுவரை காசிபாட்டை வழியாக சென்று வருகின்றனர் , மேலும் எங்கள் கிராமத்தின் வழியே செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருவதால் , பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவ்வழியே பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வருகின்றார்கள் . எனவேதான் , எங்கள் கிராமத்தில் உள்ள காசிபாட்டை வழியாக மிகவும் சிரமப்பட்டு , தினமும் சென்று வருகின்றனர் .
எனவே, போக்கு வரத்து வசதி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் நலன் கருதி மதுராந்தகத்திலிருந்து எல்லையம்மன் கோயில் வரை வந்து நிற்கும் தட எண் . T - 7 நகர் பேருந்தை பனையூரிலிருந்து - கடப்பாக்கம் - ஆலமர சாவடி வரை காசிபாட்டை வழியாக நீட்டித்து இயக்க ஆணை பிறப்பித்தல் - சம்பந்தமாக கோரிக்கை வைத்து உள்ளனர்.
செய்தியாளர்
பா. கணேசன்