புதிய தலைமுறையின் போக்கு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பயமாக இருக்கிறது.... இன்றைய தலை முறையினரின் போக்கு.....!!!
பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்
படிக்காமல் பாஸாக வேண்டும். கஷ்டப் படாமல் வேலைக்கிடைக்க வேண்டும்... யாருக்குமே மரியாதைத்தரக் கூடாது..
தனக்குத்தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்றமனநிலை...
எல்லாமே உடனேகிடைக்க வேண்டும்.. காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம்...
சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவை தான் உலகம்..
பெண்கள் மீதுமரியாதையே இல்லை..
ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழுபூச்சி மாதிரி...
வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள்கூட இல்லை..
ஒரு பேங்க்செலான் கூட நிரப்பத்தெரியாது..
ஒரு வரிக்கூட வாசிப்பதில்லை..
தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும்,பேசவும் வராது...
ஒரு விஷயத்தை கோர்வையாகச்சொல்ல வராது..
வீதியில் நின்று விஷம் குடித்துக்கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போடவேண்டும்..
பள்ளிச்சீருடையுடன் கூட டாஸ்மாக்போகிற அளவுக்கு தைரியம்..
சின்னவயசிலேயே வாயைத்திறந்தாலே கெட்ட வார்த்தை.. எப்போதும் ஏதாவது ஒருபோதையில் தன்னை மூழ்கடித்துக்கொள்ள விரும்புகிற மன நிலை..
எதிலும் நிரந்தரமாக நிலைகொள்ளாத அலைபாயும் மனம்..
ஜட்டித்தெரிய பேண்ட்போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேசமுடியாமல் விநோதமாக வெறித்தபார்வையுடன் நடப்பது....
இந்த அபாயத்தைசமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..
பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான்தெரியும்..
பெற்றோர்களின் அளவுக்கு மீறியசெல்லம் தான் சகலத்துக்கும் காரணம்..
தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணைப்போகிறார்கள்...
இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..
பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..
இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..
மேற் சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்றுஎன்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.
காலம் காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிறகுற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்
கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு.....
மறுக்கமுடியாத வேதனை தரும் உண்மை
பயமாக இருக்கிறது...... இன்றைய தலை முறையின் போக்கு.....
***அனுபவஸ்தன்***