• முகப்பு
  • குற்றம்
  • சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட அண்ணன் தம்பி இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட அண்ணன் தம்பி இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

செ.சீனிவாசன்

UPDATED: May 22, 2023, 5:50:43 AM

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பெருங்கடம்பனூர் காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் ராஜேஷ் (வயது 32).தவக்களை சுரேஷ் என்கிற சுரேஷ் (30) .இவர்கள் 2 பேரும் பெருங்கடம்பனூர் பகுதிகளில் சாராயம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் மீது இது தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சாராய வழக்கு தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் தொடர்ந்து சாராயம் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் , துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த 2 பேரையும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended