• முகப்பு
  • district
  • பெண் சாராய வியாபாரிக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெண் சாராய வியாபாரிக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை வயதில் 40 இவர் அதே கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பதில் அங்கு விரைந்து சென்று போலிசார் அப்பகுதில் சோதனை செய்ததில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தபோது கையும் களவுமாக பிடித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலவில் இருந்த போதும் இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அந்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு போட்டதின் பேரில் மேற்படி நபரை சங்கராபுரம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended