• முகப்பு
  • குற்றம்
  • சத்தியமங்கலம் வரதபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை.

சத்தியமங்கலம் வரதபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 11, 2023, 5:02:55 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவல் அடுத்து சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வரதம்பாளையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் நின்று கொண்டு அவ்வழியே சென்ற நபர்களிடம் தன்னிடம் நபர் 3 எண் கொண்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்த மூன்று எண் கொண்ட 9 லாட்டரி சீட்டுகள்,

12000 ரூபாய் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் சத்தியமங்கலம் தேள்கரடு வீதியை சேர்ந்த கேஷவன் 42 என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended