- முகப்பு
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா உற்சவத்தின் மூன்றாம் நாள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா உற்சவத்தின் மூன்றாம் நாள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் :
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் 3-ம் நாள் காலையான இன்று ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அரக்கு கலர் பட்டு உடுத்தி, மல்லிகைப் பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில், நூதன வெள்ளி பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக வீதிஉலா வந்து மண்டகப்படி கண்ட அருளினார்.
வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று ஏகாம்பரநாதர் சுவாமியை தரிசித்து வழிபட்டு சென்றனர்.