• முகப்பு
  • குற்றம்
  • நெல்லிக்குப்பத்தில் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தை திருடி வந்த திருடன் சிக்கினான்.

நெல்லிக்குப்பத்தில் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தை திருடி வந்த திருடன் சிக்கினான்.

குமரவேல்

UPDATED: May 30, 2023, 12:50:01 PM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைடிபாக்கம் ரயில்வே கேட் அருகே நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் காவலர்கள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது திருக்கண்டேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சிட்டிபாபு மகன் சித்தார்த் (23) என்பவர் ஓட்டி வந்த ஸ்பிளென்டர் இரண்டு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.

விசாரணையில் மேற்படி நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதன் பேரில் வாகனத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேற்படி வாகனம் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended