குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதி ஒதுக்கி டென்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினத்தில் அமைக்கப்படும் குடிநீர் குழாய் புவனகிரி அருகே ஆதிவராகநல்லுார் ஊராட்சி தம்பிக்கு நல்லான்பட்டினத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதிநாகலிங்கம் கோரிக்கை வைத்தார்.
அதன் பேரில் 15 வது நிதிக்குழுவில் ரூ. 3லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கி டென்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது.
நேற்று ஆயிரத்து 500 மீட்டர் தொலைவில் பைப் லைன் அமைக்கும் பணி துவங்கியது. பணிகள் குறித்து கோட்ட உதவி பொறியாளர் குமுதா ஆய்வு செய்தார் , ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதிநாகலிங்கம் விளக்கமளித்தார்.
உதவி பொறியாளர் கல்யாணமுருகன், ஊராட்சி செயலர் செல்வமணி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி