• முகப்பு
  • political
  • ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தலைவர் 2500 மஞ்சப்பையை பொது மக்களுக்கு வழங்கினார்.

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தலைவர் 2500 மஞ்சப்பையை பொது மக்களுக்கு வழங்கினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் வார சந்தையில் முதல்வர் முக. ஸ்டாலின் உத்தரவுபடி பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக, இன்று சந்தைக்கு வந்த விவசாயிகளுக்கு சுமார் 1500 பைகளும் அதோடு இஸ்லாமிய பொதுமக்கள் நோன்பு திறக்கும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் முன் இஸ்லாமிய பொதுமக்களுக்கும் ஆயிரம் பைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் பொதுமக்களிடையே , முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு வீடுகளுக்கும் மஞ்சப்பை இயக்கத்தை கொண்டு செல்வதாகவும் , அதோடு பிளாஸ்டிக்கினால் பல்வேறு நோய்கள் பொதுமக்களிடையே வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒவ்வொரு பேரூராட்சி ஊராட்சிகளிலும் திமுக சார்பாக நாங்கள் மஞ்சப்பை விநியோகம் செய்து வருகிறோம், இதனை பொதுமக்கள் பெற்றுக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். உடன் நகர செயலாளர் செல்வகுமார் மற்றும் திமுக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம். இன்றைய செய்திகள் கடலூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Cudaloore news,Cudaloore flash news,Cudaloore latest news,Cudaloore today news

VIDEOS

RELATED NEWS

Recommended