ஜூஸ் கேட்டு கொடுக்காததால் கடைக்காரருக்கு அடி உதை.

குமரவேல்

UPDATED: May 9, 2023, 10:33:04 AM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலை ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் மாருதி நகரைச் சேர்ந்த ராஜா முகமது மகன் சையது முகமது.

அவரது கடையில் கடந்த 07.05.23ம் தேதி அன்று மாலை ஜூஸ் குடிப்பதற்காக சோழவள்ளி பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் பார்த்திபன் ( 31),  ஜெயராஜ் மகன் இனியவன்(25 ), ரஜினி மகன் குறள் என்ற குறளரசன் இவர்கள் மூவரும் கடைக்கு சென்று ஐந்து ரூபாய்க்கு ஜூஸ் கேட்டு உள்ளனர். கடைக்காரர் தர மறுத்து விட்டார் என தெரிகிறது.

இதனால் கடை காரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மேற்படி நபர்கள் சையத் முகமது கனியை தாக்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து கடைகாரர் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா வழக்கு பதிவு செய்து பார்த்திபன் மற்றும் இனியவனை கைது செய்தனர்.

இதில் குறளரசன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்‌.

VIDEOS

RELATED NEWS

Recommended