• முகப்பு
  • district
  • தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய வழிப்பறி கொள்ளையண்கள்.

தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய வழிப்பறி கொள்ளையண்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கோமளா தேவி வயது 28. இவர் விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது 4 வயது மகனை பள்ளி நேரம் முடிந்ததும் மாலை நேரத்தில் வீட்டிற்கு நடந்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஒரு தனியார் பள்ளியின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கோமளா தேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்களிடம் கோமளா தேவி செயினை பறிக்க விடாமல் போராடிய நிலையில் கொள்ளையர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதை அந்த வழியாக வந்த செல்லையா என்ற ஆட்டோ டிரைவர் பார்த்து விட்டு உடனே ஆட்டோ எடுத்து மறிக்க முயன்ற போது கொள்ளையர்கள் ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே கொள்ளையர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொருவரை பிடித்து அவரின் கையை கட்டி வைத்தனர். மேலும் பிடிபட்ட கொள்ளையனுக்கு முகத்தில் காயமும் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாகை மாவட்டம், காடம்பாடி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜய் வயது 28 என்பதும் தப்பியோடியவர் திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் வயது 28 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியவரை போலீசார் தேடி வருவதோடு சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சியின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொள்ளையனிடம் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.  

VIDEOS

RELATED NEWS

Recommended