தென்னகத்தின் உள்ளே நுழைவதற்கான முயற்சி தான் செங்கோல் வழங்குவதற்கான நோக்கம்.
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 27, 2023, 3:00:04 PM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக குடந்தை ஜோதிமலை சிறப்பு கூட்டம் மன்றத்தின் நிறுவனர் திருவடிக்குடி சாமிகள் வருகை புரிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய தேசியம் என்பது மத சார்பின்மை நாடாக கட்டமைக்கப்பட்டிருப்பதால், மதம் சார்ந்த பூஜைகள் வழிபாடுகள் என்று வரும்போது அதை மாற்றி அமைக்கலாம் எனவும்,
நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட இடத்தில் செங்கோல் நிறுவுவது மதம் சார்ந்த பிரச்சினைகளாக கொண்டு செல்லும் போது, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு மண தாங்கள் ஏற்படுவதாகவும்,
சர்வாதிகார நாடாக இந்தியாவை ஆக்க வேண்டாம் எனவும், தயவுகூர்ந்து நாடாளுமன்றத்தை மத சார்புடையதாகவும் மற்றும் முடியாட்சி நாடாக ஆக்கி விட வேண்டாம் இவ்வாறு அவர் கூறினார்.