- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி.
கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி.
கோபிநாத்
UPDATED: Mar 31, 2023, 1:29:35 PM
கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாகும், இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சீனிவாச புரம் வார்டு எண்: 23ல் முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ளது. தெருவில் உள்ள வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கோவில் வாசலில் தேங்கி கிடக்கின்றது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.
கழிவு நீரை மிதித்து வீட்டுக்குள்ளேயும் செல்வதால் நோய் தொற்றும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் கொள்கின்றனர்.
இதைப்பற்றி வார்டு உறுப்பினரிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், நகர் மன்ற தலைவர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.