• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசம் அடுத்து கும்பகோணம் அருகே சாகோட்டையில் மின்கம்பத்தை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.

பாபநாசம் அடுத்து கும்பகோணம் அருகே சாகோட்டையில் மின்கம்பத்தை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். தீனதயாளன்

UPDATED: May 8, 2023, 8:26:02 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்து கும்பகோணம் அருகே சாக்கோட்டை திருமெய்யானம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளாக ஆரோக்கியமாதா தேர்பவணி திருவிழா வெகுவிமர்சையாக  நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டும் நடைப்பெற உள்ளதால் தேர்பவணி ஊர்வலத்தில் மின்கம்பம் உரசி உயிர் சேதம் ஏற்படும் அச்சம் உள்ளது.

இதனால் வீதியில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

மேலும் வீதியில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காவிடில் கிராம மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுப்பட போவதாக தெரித்தனர்.

மேலும் தங்கள் கிராமத்தில்  அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியூமாக காணப்படுவதாகவும் சாலையை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர் .

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended