நடிகை ரோஜாவிடம் திருமணம் செய்து வைக்க சொன்ன முதியவர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஆந்திரா - முதியோர் உதவித் தொகை வருகிறதா எனகேட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே. ரோஜாவிக்கு முதியோர்உதவித் தொகைவருகிறது.
என்னைபார்த்துக்கொள்ள யாரும் இல்லைஎனவே திருமணம்செய்து வையுங்கள் எனகோரிக்கை விடுத்தமுதியவர்ரால் சிரிப்பலைஏற்பட்டது.
ஆந்திரமாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அடுத்துவரும் தேர்தலைமுன்னிட்டு அனைத்து எம்.எல்.ஏக்களும் அவரவர்களுடைய சட்ட மன்ற தொகுதியில் “கடபகடப்பகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்” என்றநிகழ்ச்சி வாயிலாக மக்கள்குறைகளை நேரடியாக சென்றுகேட்டு அறியவேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களுடைய சட்டமன்றத்தொகுதியில் வீடுவீடாகச் சென்று மக்கள்குறைகளை கேட்டறிந்துவருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திரமாநில சுற்றுலாத்துறைஅமைச்சர் ஆர்.கே. ரோஜா தனது சட்டமன்ற தொகுதியான நகரிசட்டமன்றத் தொகுதியில் வீடுவீடாகச் சென்று மக்கள்குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது முதியவர்ஒருவரிடம் தங்களுக்குமுதியோர் உதவித்தொகைவருகிறதா என்றுகேட்டார். அதற்குபதிலளித்த முதியவர் முதியோர் உதவிதொகை வருகிறது. ஆனால் என்னைபார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை எனவேதிருமணம் செய்துவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைசற்றும் எதிர் பார்க்காத அமைச்சர் ஆர்.கே. ரோஜா குபீரென சிரித்துவிட்டார்.
அரசால் உதவித்தொகை மட்டுமே வழங்கமுடியும் திருமணம் எல்லாம்செய்து வைக்க இயலாது எனசிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
இந்தசம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் இடையேபெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது.
செய்தியாளர்:
பா. க. ஸ்ரீதேவி.