லப்பைகுடிக்காடு அடுத்த பெண்ணக்கோணத்தில் பரபரப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் மாவட்டம், குண்ணம் வட்டம், லப்பைகுடிக்காடு அடுத்த பெண்ணக்கோணத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் அம்மன் கோவிலின் சப்பரம் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்ய ஊர் பொதுமக்கள் தாசில்தார், நில அளவையர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களை வரவைத்து அளக்க திட்டமிட்டு இருந்தனர்.
மேலும் சப்பரம் நிறுத்த திட்டமிட்டு இருந்த இடத்தின் அருகே வசிக்கும் பெரியசாமி வயது 67, அவரது மனைவி அஞ்சலம் வயது 56 ஆகியோர்கள் எனது வீட்டின் முன்பு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தக் வேண்டாம், நாங்கள் எங்கள் வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளின் போது பந்தல் அமைக்கவும் சுபகாரியங்கள் செய்யவும் முடியாது மேலும் எனது வீட்டு நுழைவு வாயில் செல்ல இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பொதுமக்களுக்கோ அல்லது தனி நபருக்கோ இடையூறு இருப்பின் இந்த இடத்தில் சப்பரம் நிறுத்த மேற்கூரை அமைக்கக் கூடாது என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தாசில்தார் கூறியுள்ளார் என்றும் தாசில்தாரிடம் முறையிட்டனர்.
மேலும் ஊர் பொது மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பொது மக்களிடையே விசாரித்த போது இங்கு ஏற்கனவே பஞ்சாயத்து தொலைகாட்சி அறை மற்றும் இச்சிலி மரமும் இருந்ததாகவும் ஒரு சிலர் வீட்டின் முன்பு இது கட்டுவது இடையூறு விளைவிக்கும் என்பதால் கோவில் பின்புறம் கூட கட்டலாம் என தெரிவித்தனர்.
இந்த சலசலப்பின் போதே தாசில்தார், நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் சென்றுவிட்டார்கள்.
மேலும் வீட்டின் உரிமையாளர் பெரியசாமி மற்றும் அவரது மனைவி அஞ்சலம் ஆகிய இருவரையும் பொது மக்களில் ஒரு சிலர் தங்களை தாக்கினார்கள் என்று மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.