திருச்சியில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.
JK
UPDATED: May 23, 2023, 2:19:31 PM
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரரசர் பெரும்பிடுக முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் திருச்சி மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் கூட கூடிய முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரில் பாரதிதாசன் சாலை முழுவதிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சதய விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.