மனது வைத்தால் மார்க்கம் உண்டு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிலருக்கு நினைத்தது எல்லாம் நடக்கிறது....
காரணம்....
எண்ணங்கள்.
நேர்மறையான சிந்தனைகள்...
விடாமுயற்சி
நடக்கும் என்ற நம்பிக்கை...
இறைவன் அருள்
இவைகள் தான்..
உங்கள் ஆழ் மனம் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும்... முழுமையாக நம்பும்.. நடத்தியும் காட்டும்...
உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் இவருக்கு
இது கிடைக்காது என்று எதுவும் இல்லை .
யாருடைய நிலை வேண்டுமானாலும் எந்த நொடியில் வேண்டுமானாலும் மாறலாம்.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆழமாக அழுத்தமாக நம்பும் பொழுது அது அவருக்கு உண்மையாக நடக்கும்.
முதலில் நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு இழுத்துச் செல்லும்...
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
எந்த அளவுக்கு நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களைத் தேடி நேர்மறையான செய்திகள் மட்டுமே வரும்...
வெளி உலகில் நடக்கும் செயல்களையும் வெளி உலகில் உள்ள பொருட்களையும் வைத்து எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்...
அவையெல்லாம் நிலையற்றவை..
உங்கள் மனம் அதில் வாழும் இறைவன் இவை நிரந்தரமானவை..
மகிழ்ச்சியும் நிம்மதியும் இவற்றால் நிர்ணயிக்கப்பட்டால் நிலையானதாக இருக்கும்.
இறைவனை நம்புங்கள்.
நேர்மறையாக சிந்தியுங்கள்...
உங்கள் ஆழ்மனம் உங்கள் வாழ்வையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது ...
அது எப்படி மாற்ற போகிறது என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது..
நேர்மறையாக சிந்திப்போம்.. நிச்சயமாக வாழ்க்கையும் நேர்மறையாக அமையும்....
உங்கள் எண்ணங்களால்
உங்கள் வாழ்க்கை அழகாகட்டும்.
உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
***அனுபவஸ்தன்***