சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வயதான காமக்கொடூரன்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியை சேர்ந்த ராமநாதன் (65) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனவளச்சேரி கிராமத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அங்கு 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார் இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தார் கேரளா மாநிலம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை கடத்தி வந்த நிலையில் இன்று கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த ராமநாதனை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி உதவியுடன் கைது செய்து கேரளா கொண்டு சென்றனர்.
கேரளாவில் சிறுமி பலாத்காரம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக கும்பகோணத்தில் பதுங்கி இருந்த முதியவரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.