- முகப்பு
- கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பசுபதி மஹாலில் நடந்தது.
கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பசுபதி மஹாலில் நடந்தது.
Entertainment
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில்
ஐந்து வயது முதல் பெரியவர்கள் வரை நடந்த இப்போட்டி துவக்க விழாவுக்கு தேசிய அமைப்பு செயலாளர் கராத்தே ராஜ் தலைமை வகித்தார். நடுவர் குழு தலைவர் தனபால் துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உலகம் சிலம்பம் விளையாட்டு சங்கத்தலைவர் சுதாகரன், சிறப்புரை நிகழ்த்தினார்..
போட்டியை நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா ஆகியோர் போட்டியை துவக்கிவைத்தனர்.தனித்திறமை மற்றும் தொடுமுறை பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் ஐந்து வயது முதல் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் நாகராஜன், ஐயப்பன்,மாதவன்,தயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.