• முகப்பு
  • பண்ருட்டி அருகே சாராயம் குடித்த இளைஞர் மரணம்.

பண்ருட்டி அருகே சாராயம் குடித்த இளைஞர் மரணம்.

குமரவேல்

UPDATED: May 19, 2023, 7:17:01 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து மகன் சாமிவேல் (37)என்பவர் கொத்தனார் வேலை செய்து வருபவர்.

இவரின் மனைவி உடல்நிலை சரியில்லாமல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அவரை சென்று பார்த்து விட்டு பேருந்து மூலம் புதுச்சேரி மாநிலம் மடுகரையில் உள்ள சாராய கடையில் சாராயம் குடித்து விட்டு அதே பேருந்து மூலம் பண்ருட்டி பேருந்து நிலையம் வந்துள்ளார்.

அப்போது போதையின் உச்சத்தில் சென்றதால் மயக்கத்தில் கீழே விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது.

தகவல் தெறிந்து பொதுமக்கள் உதவியுடன் 108ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளதாக தெரிகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended