• முகப்பு
  • crime
  • திருச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு.

திருச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 10:25:37 AM

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொட்டியம் பகுதியை சேர்ந்த பிச்சைரத்தினம் என்பவர் மனைவி பிரபாவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக கூறபடுகிறது. அப்போது காப்பர் டீ அகற்றாமல் தவறுதலாக ஆப்ரேசன் செய்யபட்டாகவும், அதன் காரணமாக தனக்கு வயிற்று வலி ஏற்பட்டு மிகவும் சிரமப்படுவதாகவும் அரசு செலவில் தனக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரிடம் பிரதீப்குமாரிடம் மனு அளித்தனர். இது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்ட செய்தியாளர் ஜே.கே

VIDEOS

RELATED NEWS

Recommended