• முகப்பு
  • district
  • மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மவுனம் காத்து வரும் காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மவுனம் காத்து வரும் காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆஷிக் அகமது அவர்களின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அங்கு செய்தியாளர் சந்தித்துப் பேசுகையில்:- ராணுவத்தில் ஆள் சேர்ப்பது என்பது சுதந்திர இந்தியாவில் தொன்றுதொட்டு நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு முறையாக அவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து பாதுகாப்பு படை என்று சொல்லக்கூடிய எல்லையில் இந்த தேசத்தை காப்பதற்காக தன் உயிரை துச்சமாக நினைத்து களத்தில் நிற்கக் கூடியவர்கள் நம் இந்திய தேசத்தின் ராணுவ வீரர்கள் இந்தியாவில் இருந்த ஜவகர்லால் நேரு அன்னை இந்திரா காந்தி ராஜீவ் காந்தி வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வகுத்தளித்த பதவி இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் பதவி அவர்கள் காலத்தில் என்ன நடைமுறையில் இருந்தது. அதே நடைமுறைதான் ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க நிகழ்விலும் இருக்க வேண்டும் இந்த தனியாருக்கு குத்தகை விடுவதுபோல் கடலை குத்தகை விட்டார்கள் அம்பானிக்கு அதானிக்கு அவர்களுக்காக எல்லாவற்றிக்கும் தனியார் மயமாக்குவது நிகழ்வு போல் இந்திய நாட்டின் பாதுகாப்பையும் தனியாரிடம் ஒப்படைப்பது அல்லது தனியார் ஏஜென்சி மூலமாக ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வது அல்லது ஒப்பந்த அடிப்படையில் பிடிப்பில்லாமல் இளைஞர்களை கொண்டுபோய் அதிலே திணிப்பது ஏற்புடையது செயலல்ல இந்தியாவே பற்றிக்கொண்டு எரிகிறது. ஆகையால் இந்திய ஒன்றிய அமைச்சர் இந்த திட்டத்தை உடனடியாக தலைமை அமைச்சரும் ராணுவ அமைச்சகம் உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை முன்வைக்கிறது மேலும் மேகதாது குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு ஆதரவாக இருப்பது தலைமை அமைச்சர் மௌனம் காப்பது நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆதரவாக இருப்பது காவேரி மேலாண்மை ஆணையத் உடைய தலைவராக இருப்பவர் ஒரு சார்பு நிலை எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஆதலால் காவேரி மேலாண்மை வாரியத்தை தலைவரை உடனடியாக அந்தப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைக்கிறது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வேல்முருகன் இன்றைய தினம் மாலை எதிர்கட்சி சட்டமன்ற தலைவர்கள் கொண்ட குழு மாலை டெல்லிக்குச் சென்று நாளை இந்திய நாட்டின் நீர்ப்பாசனத் துறை அமைச்சரை அமைச்சரை சந்தித்து இருக்கிறது. அப்போது எமது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழருக்கும் விவசாயிகளுக்கும் துரோகமிழைக்கும் காவேரி மேலாண்மை தலைவர் பொறுப்பில் இருப்பவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம் . தொடர்ந்து செய்தியாளர்கள் அண்ணா திமுக ஒற்ற தலைமை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன் உட்கட்சி விவகாரம் என்றும் அந்த கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூடி முடிவெடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு உள்ளது . தொடர்ந்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன் நேற்றைய தினம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டப்பட்டு இதற்காக விரைவில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தீர்மானத்திற்கும் விரைவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக எங்களது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் மாணவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய வேல்முருகன் ஜனாதிபதி தேர்தலில் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறினார். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி .சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended