பெரும்புள்ளிக்கு பெருத்த ஏமாற்றம் அதிமுக மீது கடுங்கோபம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்பதவிக்கான வேட்பாளராக தன்னைதான் அறிவிக்கப்படப் போகிறார்கள் என மிகஉறுதியாக இருந்த அ.தி.மு.க மூத்த நிர்வாகியும் முன்னாள்அமைச்சருமான ஒருவர் கடும்அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள்வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள்முதல்வருமான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பலமுக்கிய பதவிகளையும் வகித்து உள்ளார்.
தலைநகரான சென்னையில் முக்கியத்தலைவராக வலம்வந்தவர் தினமும் ஊடகங்களை சந்தித்து ஆளும்கட்சியாக இருக்கும் போதும்சரி எதிர்க் கட்சியாக இருக்கும் போதும்சரி பலத்த வாதங்களை முன் வைத்து எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடிகொடுத்து வந்தார்.
கடந்தசில நாட்களுக்கு முன்புகூட செய்தியாளர் சந்திப்பில் பேசியஅவர் தலைமைதனக்கு பொறுப்பு இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் எனக்கூறியிருந்தார்.
கடந்தத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்பதவி கிடைத்தால் நிச்சயம் சிறப்பாகசெயல்படுவேன் எனக்கூறி இருந்த அவருக்கு எதிர் பாராத விதமாக சீட்டு கொடுக்கப் படவில்லை.
இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் உடன்இருக்கும் மூத்தநிர்வாகிகள் கூறியுள்ளனர்
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்