சர்வ தேச உலக சுற்றுச்சூழல் தின அனுசரிப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் எள்ளேரி கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் கல்பனா சங்கர் மற்றும் முதுநிலை துணை தலைவர் விஜயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், முதுநிலை பொது மேலாளர் மோசஸ் சாமுவேல் அவர்களின் வழிகாட்டுதலின் படி 100க்கும் மேலான மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா, ஜூன் 25 அன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவானது ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் இணையம், பெல் ஸ்டார் நிதி நிறுவனம் ஆகியோர் உதவியோடு நடைபெற்றது. இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் T.மணிவண்ணன், கடலூர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு எல்லேரி பஞ்சாயத்து தலைவர் சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாயத்து கிளார்க் பிரகாஷ் , வார்டு உறுப்பினர்கள் ரஹ்மத் நிஷா, குமுத வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் சிறப்பாக செயல்படும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணி, சுற்று சூழல் உறுதி மொழி ஏற்பு, பொது இடங்களை தூய்மை செய்யும் பணி ஆகியவற்றை அனைவராலும் இணைந்து நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி