வேட்பாளர் கே எஸ் தென்னரசுக்காக ஈரோடு கிழக்கு பகுதியில் அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 14, 2023, 2:19:24 PM
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் அருணாசலம் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் EX. MLA,
பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் Ex. MLA, பெரம்பலூர் மாவட்ட கழக பொருளாளர் பூவை செழியன் EX. MLA, மாவட்ட அவை தலைவர் குன்னம் குணசீலன் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர் என்று தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு அவர்களுக்காக ஈரோடு கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
செ.சுபாஷ்.