வேலூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது சதய விழா.
வாசுதேவன்
UPDATED: May 23, 2023, 3:03:06 PM
தமிழ்நாடு முத்தரையர் மறுமலர்ச்சி சங்கத்தின் சார்பாக வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு மன்னரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார், பொதுச் செயலாளர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் வெள்ளை, துணைச் செயலாளர் கணேசன், மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், சமுதாயத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அணைக்கட்டு நிவாஸ் நன்றி கூறினார். சத்துவாச்சாரி, செதுவாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.