டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பானை வெளியிட்டதற்கு நன்றி - பி.ஆர். பாண்டியன்.
இளவரசன்
UPDATED: May 11, 2023, 10:52:47 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம் கைவிடப்பட்டது தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டதற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிட வேண்டும் என தமிழக முதலமைச்சரை பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.