ஓரகடம் சிப்காட் அருகில் உள்ள நேஷனல் ஆட்டோ பிளாஸ்ட் உதிரிபாக தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களின் உள்கட்டமைப்பு பொருட்கள் தயாரிக்கும் நேஷனல் ஆட்டோ பிளாஸ்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து நிறுவனத்தில் இன்று மாலை வேளையில் 15 நபர்கள் மட்டும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட மின் கசிவால் குடோனில் உள்ள பொருட்கள் தீப்பற்றி மளமளவென முழுவதுமாய் எரிய ஆரம்பித்து விட்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த தீயானது தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்து வருவதால் நிறுவன கட்டிடம் முழுவதும் தீயில் கருகியது.
தீயை அணைக்க ஸ்ரீபெரும்பத்தூர், இருங்காடுகோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தனியார் நிறுவனங்களில் இருந்தும் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.