- முகப்பு
- மாவட்டச் செய்தி
- எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்துவிட்டு சென்ற பத்து நிமிடத்தில் டிபன் கடையில் தீ விபத்து.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்துவிட்டு சென்ற பத்து நிமிடத்தில் டிபன் கடையில் தீ விபத்து.
லட்சுமி காந்த்
UPDATED: May 23, 2023, 7:15:35 PM
வேலூரில் நடைபெறும் அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி காரில் சென்றார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அதிமுக பிரமுகர்கள் ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி சென்ற பத்து நிமிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் இருந்த டிபன் கடையில் திடீரென மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து சம்பவ இடத்திலிருந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதன் பிறகு நிகழ்வு இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தீ அணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இருப்பினும் தள்ளுவண்டி கடை பின்னால் அமைக்கப்பட்டிருந்த குடிசை என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
மளமளவென திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் வரவேற்பு அளிக்க பட்டாசு கொளுத்திய போது தீப்பொறி பட்டு கடையில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.