சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வந்தவாசி, ஜூலை 05:-
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சுவாமி விவேகானந்தரின் 120 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் டாக்டர் ம. சுரேஷ் பாபு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சிறப்பாசிரியர்கள் கு.சதானந்தன், புருஷோத்தமன், க.பூபாலன், க.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் சுவாமி விவேகானந்தரின் திருவுவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.