பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையில் ஆய்வு ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை எண் 9240 இயங்கி வருகிறது .இந்த பகுதியில்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் ஏறுவதற்கு காத்திருப்பார்கள் .
அவ்வப்போது இந்த கடையில் மதுவாங்கி குடித்துவிட்டு சிலர் ரகலையில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அரசியல் கட்சியினர் சேவை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து அதே பகுதியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் மன்னார்குடி கோட்டை கலால் அலுவலர் குருநாதன் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மண்டல துணை தாசில்தார் சிரஞ்சீவிராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரெத்தினவேல், வருவாய் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.