உலக யோகாதினத்தை முன்னிட்டு யோகாவில் ஈடுபட்ட மாணவ – மாணவிகள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் யோகா செய்தனர்.
அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறை, கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் திருச்சி இரண்டாவது இரும்பு கவச அணி மற்றும் என்சிசி மாணவர்கள் சார்பாக 700 மாணவ – மாணவிகள் சீருடைகளுடன் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகள் முறையான இடைவெளியுடன் அணிவகுத்து நின்று சூர்ய நமஸ்காரம், பத்மாசனம், வஜ்ராசனம், சக்கரஆசனம், ஹலாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.