வலிமைப்பட தயாரிப்பாளர் போனி கபூர், கிரெடிட்கார்டு சைபர் மோசடியில் ரூ. 3.82 லட்சத்தை பறி கொடுத்து உள்ளார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தயாரிப்பாளரான போனி கபூரின் கிரெடிட்கார்டை உபயோகித்து சுமார் ரூபாய் 4 லட்சம் மோசடி நடந்து இருக்கிறது.
இதை அடுத்து புகாரின் அடிப்படையில் பிப்ரவரி ஒன்பது அன்று போனிக் கபூரின் கணக்கிலிருந்து ஐந்து முறை கேடுகளில் ரூபாய் 3.82 லட்சம் மாற்றப் பட்டது.
மும்பையிலுள்ள அம்போலி காவல்நிலையத்தில் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தின் தொடர் புடைய பிரிவுகளின் கீழ் கடந்த புதன் கிழமை வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதில் போனிக் கபூர் தன் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப் பட்டதை அறிந்ததும் இதுத்தொடர்பாக வங்கியில் விசாரித்தார்.
அதன் பின் போலீசில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.
இது குறித்து யாரும் தனக்கு கிரெடிட்கார்டு விவரங்களைக்கேட்கவில்லை, தொலை பேசி அழைப்பு எதுவும் வரவில்லை என தயாரிப்பாளர் காவல்த்துறையினரிடம் தெரிவித்தார்.
ஆகவே போனிக் கபூர் கார்டைப் பயன் படுத்தும் போது யாரோ தரவுகளைப்பெற்றிருக்கலாம் என காவல்த்துறை அதிகாரிகள் சந்தேகித்தனர்.
தற்போது போனிக் கபூரின் கார்டிலிருந்து குருகிராமிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணக்கிற்கு பணம்சென்றது தெரியவந்து உள்ளது.
எனவே காவல்த்துறையினரின் விசாரணை வாயிலாக குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி.