மணப்பாறை அருகே சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளின்; சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் நரசிம்மன் துவக்கி வைத்தார். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் பணியாற்றிய பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெறவந்த பொன்னம்பலம்பட்டி மற்றும் சுற்றுப்புற ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்