- முகப்பு
- 10 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை
10 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jan 10, 2024, 4:51:35 PM
தற்போது காணப்படும் காலநிலையால் மலையகத்தின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளமையினால் பரிட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை தினக்களம் தெரிவித்துள்ளது
மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல – உடுவர 7ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக பாதையை துப்புரப்படுத்தும் பணி தாமதம் அடைந்திருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த நிலையில் 10 மாவட்டங்களுக்கும் அது போன்று பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயல்படுமாறு கால நிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.