• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சாலையில் ஏற்பட்ட பள்ளம் பழுது பார்க்காத நெடுஞ்சாலைதுறை அப் பள்ளத்தை பழுது நீக்கம் செய்யும் சமூக சேவகர்.

சாலையில் ஏற்பட்ட பள்ளம் பழுது பார்க்காத நெடுஞ்சாலைதுறை அப் பள்ளத்தை பழுது நீக்கம் செய்யும் சமூக சேவகர்.

கார்மேகம்

UPDATED: May 8, 2023, 10:28:16 AM

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செக்போஸ்ட் அருகில் ஈசி ஆர் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

அதைக் கண்ட மக்கள் நல்லிணக்கம் நிருவனத் தலைவர் சமூக சேவகர் ஹபீப் முஹம்மது ஈசிஆர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்துள்ளார்.

அவர் மேலும் நம்மிடம் தெரிவிக்கையில் கீழக்கரை செக்போஸ்ட் அருகில் ஈசி ஆர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பழுது நீக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை, நெடுஞ்சாலைதுறை நெடுஞ்சாலையில் ஏற்படும் இது போன்று சாலைப் பழுதுகளை உடன் பராமரிப்பு செய்து பழுது நீக்கம் செய்ய வேண்டும். 

சாலைப் பராமரிப்பில் கவணம் செலுத்த வேண்டும் சாலைப் பழுது உடனுக்குடன் நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended