ஷூவுக்குள் பாம்பு..... உஷார்......
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வெளியில் விடப்படும் காலணிகளை அணியும்பொழுது அதனைமுறையாக சுத்தம்செய்து பரிசோதிக்கவேண்டும் என அவ்வப் போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் சிலநேரங்களில் அவசரம் மற்றும் கவனக் குறைவு காரணமாக அப்படியே அணிந்து கொள்வதுவழக்கம்.
ஏற்கனவே கேரளாவில் பள்ளிமாணவி ஒருவரின் ஷூவிற்குள் பாம்பு ஒன்றுபதுங்கி இருந்தவீடியோ காட்சிகள் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு வெளியாகி அதிர்ச்சிஏற்படுத்தியது.
நம்மூரில் கூட தேள் இருந்து கொட்டியதால் குழந்தைகள் இறந்த வரலாறும் உண்டு.
இந்நிலையில் கர்நாடகாவிலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்து உள்ளது. ஆண்கள் அணியக் கூடிய ஷூ ஒன்றில் 'உஷ்...உஷ்' என சத்தம்கேட்க இளைஞர் ஒருவர்அதனை எடுத்துப்பார்க்கையில் உள்ளே சிறியஅளவிலான நாக பாம்பு படுத்து இருந்தது.
இதனைக்கண்டு அதிர்ந்து அந்தஇளைஞர் உடனடியாக குச்சியைக்கொண்டு அதனை வெளியேஎடுத்தார்.
இது தொடர்பான வீடியோகாட்சிகள் சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
பா. கணேசன்