சிறுவர் மீது பாலியல் சந்தேக நபர் கைது
கண்டி - ஜே. எம். ஹாபீஸ்
UPDATED: May 31, 2023, 3:32:07 AM
12 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்டயப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் தம்புள்ள பொலீஸ் நிலையத்தில் சரணடைந்தததை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பல முறை இது நடை பெற்றதாகவும் முறைபபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை தம்புள்ள நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடு க்கப்பட்டள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேக நபருக்கு இதே விதமாக குற்றச் சாட்டு ஒன்றும் இருப்பதாகப் பொலீசா்ர தெரிவித்தனர்.