அம்பத்தூரில் இளைஞர் ஓட ஓட விரட்டி விரட்டி கொலை சம்பவக் காட்சிகள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை ஒன்பது பேர்கொண்ட கும்பல் கடத்தி படு கொலை செய்து உள்ளனர்.
கொலை செய்த இரு காட்சிகள் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர் அருகே சண்முகபுரம் இந்திராநகர் கோவில் தெருவைச்சேர்ந்தவர் உதய குமார்(வயது25). இவர் கூலிவேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் ஏழு மாதத்தில் ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
இவர் சமீபத்தில் வேப்பம் பட்டில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தாயைப்பார்ப்பதற்காக சண்முகபுரத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை நான்கு பைக்குகளில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்றுள்ளனர்.
இத்தகவலை உதயகுமாரின் தாயார் லதாவிடம் நண்பர் ஜீவா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகனை கடத்திச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.
இத்தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர்போலீசார் கடத்திச் சென்ற பகுதியில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது உதய குமாரை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து போலீசார் தொடர்ந்து சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உதயகுமாரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஓட ஓட சரமாரியாக தலை, முகத்தில்வெட்டி படுகொலைசெய்யும் காட்சிகள் கிடைத்து இருக்கிறது.
இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுத்தொடர்பாக சரண், அப்புன், மாரிஸ் பிரான்க்ளின், எலியா, வினோத் குமார் உள்பட ஒன்பது பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்துவிசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்தவாரம் உதய குமாரின் நண்பர் ஜீவாவை அதே பகுதியைச்சேர்ந்த எலியா,மோசஸ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதை இவர் தட்டிக்கேட்டதால் முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஒன்பது பேரும் உதய குமாரை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டி கொலைசெய்தது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
பா. கணேசன்