• முகப்பு
  • district
  • கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் !

கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில், இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி , கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் சுமார் 3 மணி அளவில் அந்த கிராமத்திற்கு வந்திருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூட்டத்தை தொடங்குவதற்கான பணிகளை செய்தபோது , அங்கு வந்திருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் , இந்த கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் சக்திவேல் என்பவரை, பணி செய்ய விடாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடுப்பதாகவும், ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலை முறையாக நடத்தாமல் வருவதாகவும், இதனால் ஊராட்சி நிர்வாகம் சரிவர செயல்பட முடியாமல் , அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவதால், தொடர்ந்து முறைகேடு நடப்பதாகவும் அதனால் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலை உரிய முறையில் நடத்தி அதன் பின்னர் மக்கள் வளர்ச்சிக்கான பணிகளை செய்த பின்னரே கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண் உதவி அலுவலர் நல்ல குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கிராமசபை கூட்டத்தை நடத்தாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். நாடு முழுவதும் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரியமுறையில் முக்கியத்துவம் அளிக்காததால் , நாச்சியார் பேட்டை கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக , அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் கிராம சபை கூட்டம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,ullundurepattai news live,ullundurepattai news tamil,ullundurepattai news,ullundurepattai news in tamil today,ullundurepattai news today in tamil

VIDEOS

RELATED NEWS

Recommended