கிணற்றில் விழுந்தவர் மீட்பு!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஆண்டிபட்டி : வைகை அணையை சேர்ந்த மீன் வியாபாரி சின்னசாமி 41. மீன் விற்பனைக்காக ஆண்டிபட்டி ஒன்றியம் வேகவதி ஆசிரம கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்பகுதியில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கோழியை மீட்க கிணற்றில் இறங்கினார். எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டு எழுந்து வர முடியவில்லை.
ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் சின்னச்சாமியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.