- முகப்பு
- தேர்தலில் தோற்றாலும் மீண்டும் முதல்வராகிறார் புஷ்கர் சிங்
தேர்தலில் தோற்றாலும் மீண்டும் முதல்வராகிறார் புஷ்கர் சிங்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நடந்து முடிந்த உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 46 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், பாஜக தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டபேரவைத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியதால், ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் மூலம் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளது.