உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் .
பெரம்பலூர் வட்டம், கல்பாடி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பெரம்பலூர் அவர்கள் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பெரம்பலூர் அவர்கள் தலைமையிலும், குன்னம் வட்டம் வடக்கலூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பெரம்பலூர் அவர்கள் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) பெரம்பலூர் அவர்கள் தலைமையிலும் 09.07.2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்