• முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிர்ச்சி முகாம்.

இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிர்ச்சி முகாம்.

கார்மேகம்

UPDATED: Mar 31, 2023, 6:24:26 AM

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிர்ச்சி முகாம் நடைபெற்றது.

இம் முகாமிற்கு மகளீர் திட்ட அலுவலர் அபிதாகனிப் தலைமை வகித்தார் ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் உதவி திட்ட அலுவலர்கள் சரவனபாண்டி, கிருஷ்னகுமார் வட்டார இயக்க மேலாளர்கள் சந்திரபோஸ் பரிமளாதேவி, ஒருங்கினைப்பாளர்கள் காளீஸ்வரி நளாயினி மற்றும் பலர் பங்கேற்றனர்.

இம்முகாமில் திருப்புல்லாணி மண்டபம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 350/ க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்றனர்.

10 முன்னனி நிருவனங்களுக்கு 102 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆனை வழங்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended