சீனாவிற்கு 200 அல்ல 700 ஏக்கர் வழங்க திட்டம் - சிறிதரன்

TGI

UPDATED: May 3, 2023, 11:54:10 AM

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் இடம்பெற்றுள்ளது. 

இரணைமடு குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீனாவிற்கு காணி வழங்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டிருந்தார்.

___________________________________________________

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/KTXQ9xLJwHQ

___________________________________________________

குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுத்து வந்த நிலையில், வடமராட்சி கிழக்கில் 200 ஏக்கர் காணி வழங்கப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் உண்டா என சிறிதரனிடம் வினவினார்.

200 அல்ல 700 ஏக்கர் என்றும், அதற்கான கோரிக்கை ஆளுநரிடம் விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரணைமடு குளத்திற்கு அண்மித்த பகுதியிலுமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கான ஆவணம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் அந்த ஆவணத்தை நாளை யாழ்ப்பாணத்தில் தர முடியுமா என அமைச்சர் வினவினார்.

அதனை உங்களிடம் தர முடியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended