வயல் பகுதியில் உடல் அடிபட்ட நிலையில் இருந்த மயில் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரம் கிராமத்தில் அருகிலுள்ள ஈச்சங்காடு கிராமத்தில் வயல் பகுதியில் உடல் அடிபட்ட நிலையில் கடந்த மயில் கிராமத்தில் உள்ள இளைஞர் ராஜ்குமார் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சமூக ஆர்வலர் இராம்குமார் நேரில் சென்று விசாரித்து வனத்துறைக்கு தகவல் அளித்து முதல் உதவிக்காக கடலூர் வண்டி பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழுவுடன் இணைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை அளித்ததில் மயில் மின்கம்பம் தாக்கி காயம் அடைந்ததாக நாய்க்கடி பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்தனர் , ஒரு மணி நேரம் மருத்துவ சிகிச்சை அளித்தபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. முகமது வெங்கடேஷ் மருத்துவர்கள் இணைந்து வனத்துறை அதிகாரி ஆதவன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பு: மயில் இனப்பெருக்கம் கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளதால் வீட்டு வளர்ப்பு நாயை தவிர தெருநாய்களை மீட்டெடுத்து நகராட்சி , ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் இதுபோன்ற சேவைகளை மக்கள் செய்தால் விலங்குகள் பறவைகள் பாதுகாக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் தகவல் அளித்தனர்.
செய்தியாளர் ஆதி அபினேஷ்.